பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.2020(Covai women ICT_போதிமரம்) - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 23, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.2020(Covai women ICT_போதிமரம்)

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.


பழமொழி

Love thy neighbours  as thyself

 உன்னைப்போல் பிறரையும் நேசி.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

மனிதன் எப்பொழுதும் தான் வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது இல்லை .ஆனால் அவனது கீழ்தர செயல்கள் தொடங்கிய இடத்திற்கே இட்டுச்செல்கிறது........

                  - சாரதா தேவி்

பொது அறிவு

1.மத்திய கலால் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 பிப்ரவரி 24

2.கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி.

English words & meanings

Zoopathology – study of animal diseases. விலங்குகள் நோய் குறித்த படிப்பு.

 Zebra-Wood - lined wooden pieces, பட்டைக் கோடுகள்  உடைய மரக் கட்டைகள்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன .மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளன.

Some important  abbreviations for students

OMW -- On my way

OMC --  On my cash

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

கதை :
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

நீதி :
தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

யாகம்  -  வேள்வி
யுத்தம் - போர் 
ரகசியம்  -  மறைபொருள்,  குட்டு       
ருசி   -   சுவை   
லாபம்- மிகை ஊதியம்

இன்றைய செய்திகள்

22.02.20

◆நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

◆விக்கிப்பீடியா அமைப்பினால் நடத்தப்பட்ட வேங்கை கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 331 பயனர்கள் பங்கேற்று 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதினர். அதில் தமிழ் மொழி 62 பயனர்கள் எழுதிய 2959 கட்டுரைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

◆நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இணையவழியில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று  தில்லியில் நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

◆ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, கௌரவ் பாலியான், சத்யவிரத் கடியன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

◆ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines


🌸For the student Abinaya from Namakkal who is going to the NASA International research centre the government will give 2,00,000 rupees says CM Palanisamy.

🌸 In The Tiger Project Essay Competition from India 331 Participants wrote in 16 languages and wrote 13,490 essays.  In this 62 Tamil language participants took part and wrote 2959 essays and bagged first prize.

🌸 PM  Narendra Modi said in international Judiciary Meet that all courts throughout  India will be united through online and the central government is taking the steps for this.

🌸 In Asian Wrestling Championship India's Ravikumar Thahiya won gold medal. And also Pajrang Puniya, Gourav Paliyaan, Sathyavirath Kadiyan won silver medals.

🌸 In Spain's Madrid City there is inner stadium athletic competition for ladies is going on. In this in triple jump Yulimer Rojas from Venisula jumped 15.43 mts and form a new world record.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment