தனியார் சுயநிதிப் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்ப்பதில் 31ம் தேதியே சேர்க்கை ஆணைகள் வழங்க வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவை சேர்ந்–்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிந்த பிரிவை சேர்ந்–்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கான செலவை அரசு செலுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சேர்க்கைகான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாளையுடன் இதற்கான தேதி முடிகிறது.
இதையடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை
:வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட உள்ள குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கல் முறையின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர்களால் 31ம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்பட வேண்டும்.
குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து பிரிவை சேர்ந்த தகுதியான நபர்களுக்கு 31ம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்பட வேண்டும். ஆணை பெற்றதும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
. 25 சதவீதத்துக்கும் அதிமாக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகள் கூடுதல் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜூன் 6ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்க வேண்டும். அந்த பட்டியலில் ஆய்வு அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் பெற்றோர் கையொப்பமிட வேண்டும்.
அதிக விண்ணப்பம் வந்துள்ள பள்ளிகளில் பெற்றோர் அதிக அளவில் கூடும் இடங்களில் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது வருவாய் துறை அலுவலர் முன்னிலையில் குலுக்கல் நடத்த வேண்டும்
. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் பட்டியல், காத்திருப்போர் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். மேற்கண்ட அனைத்து பணிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து முடிக்க வேண்டும்
கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவை சேர்ந்–்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிந்த பிரிவை சேர்ந்–்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கான செலவை அரசு செலுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சேர்க்கைகான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாளையுடன் இதற்கான தேதி முடிகிறது.
இதையடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை
:வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட உள்ள குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கல் முறையின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர்களால் 31ம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்பட வேண்டும்.
குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து பிரிவை சேர்ந்த தகுதியான நபர்களுக்கு 31ம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்பட வேண்டும். ஆணை பெற்றதும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
. 25 சதவீதத்துக்கும் அதிமாக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகள் கூடுதல் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜூன் 6ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்க வேண்டும். அந்த பட்டியலில் ஆய்வு அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் பெற்றோர் கையொப்பமிட வேண்டும்.
அதிக விண்ணப்பம் வந்துள்ள பள்ளிகளில் பெற்றோர் அதிக அளவில் கூடும் இடங்களில் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது வருவாய் துறை அலுவலர் முன்னிலையில் குலுக்கல் நடத்த வேண்டும்
. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பெயர் பட்டியல், காத்திருப்போர் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். மேற்கண்ட அனைத்து பணிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து முடிக்க வேண்டும்
No comments:
Post a Comment