கேரளாவில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை ஆயிரம் பேர் தமிழகத்தில் இருந்து மருத்துவம் படிக்க விண்ணப்பித்துள்ளனர்.
கேரளாவில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் இருந்து 1900பேர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 7300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எந்த மாநில மாணவரும் சேர்ந்து படிக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால், கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் வகையில் நடைமுறைகள் இருந்தன. உச்சநீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவுப்படி தற்போது பிற மாநில மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த பிரிவின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், எத்தனை சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தாமல் இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுழைவு தேர்வு ஆணையரகம் கருதுகிறது.
கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால் மேல்முறையீடு வாய்ப்புகள் குறைவாக உள்ளது
. வரும் ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை முதல்கட்ட மருத்து
கேரளாவில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து கேரளாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் இருந்து 1900பேர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 7300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எந்த மாநில மாணவரும் சேர்ந்து படிக்க வழிவகைகள் உள்ளன.
ஆனால், கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் வகையில் நடைமுறைகள் இருந்தன. உச்சநீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவுப்படி தற்போது பிற மாநில மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த பிரிவின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், எத்தனை சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தாமல் இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுழைவு தேர்வு ஆணையரகம் கருதுகிறது.
கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால் மேல்முறையீடு வாய்ப்புகள் குறைவாக உள்ளது
. வரும் ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை முதல்கட்ட மருத்து
No comments:
Post a Comment