கூகுள் பே, அமேசான் பே நிறுவனங்களுக்கு 24 மணி நேர கெடு - ஆர்.பி.ஐ - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

கூகுள் பே, அமேசான் பே நிறுவனங்களுக்கு 24 மணி நேர கெடு - ஆர்.பி.ஐ

இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டிலேயே சர்வர் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க கூகுள் பே, அமேஸான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால் அதன் தரவுகளை வெளிநாடுகளின் சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

No comments:

Post a Comment