கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திமாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன், தமிழகத்தில் உள்ள கோவில்களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்திருந்தவழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்இன்று நடைபெற்றது.

 அதன் முடிவில், "தமிழக கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும், அதிகாரமின்றி கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்குநீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

மேலும், அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களை அப்பகுதி மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன்,அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால், கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment