சத்துணவுப் பணியாளர்களுக்கு நகவெட்டி, சோப்பு, கையுறைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பள்ளி மாணவர்களுக்கு தக்காளி, எலுமிச்சை, சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகளில் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.1.73 கோடி செலவில்...:
சத்துணவு மையப் பணியாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.1.73 கோடி செலவில் சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது
. இதன் அடிப்படையில், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ.400 செலவில் சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியாளர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார பேழைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்துணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கையுறைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரம் பேணி காக்கப்படுவதன் மூலம் உணவின் தரம் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பள்ளி மாணவர்களுக்கு தக்காளி, எலுமிச்சை, சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகளில் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.1.73 கோடி செலவில்...:
சத்துணவு மையப் பணியாளர்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.1.73 கோடி செலவில் சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது
. இதன் அடிப்படையில், சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ.400 செலவில் சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுகாதாரப் பேழைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியாளர்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார பேழைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்துணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் கையுறைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். சுகாதாரம் பேணி காக்கப்படுவதன் மூலம் உணவின் தரம் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment