வாகனங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

வாகனங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.


 வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கவும், போலி உதிரி பாகங்களை அடையாளம் காணவும் மைக்ரோடாட்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


இதை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அது தொடர்பாக பொதுமக்கள் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


 இதை அடுத்து அந்த வரைவு அறிக்கையில் வாகனங்கள் மற்றும் அதன் பாகங்களில் கண்களால் காண முடியாத மைக்ரோடாட்ஸ் நிரந்தரமாக பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோஸ்கோப் மற்றும் அல்ட்ராவைலட் ஒளி மூலம் மட்டுமே அந்த மைக்ரோடாட்ஸை அடையாளம் காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வாகனங்களில் உடல் பாகங்களுக்கு அடிக்கப்படும் ஸ்ப்ரே மற்றும் உதிரி பாகங்களில் இதனை இடம் பெற செய்ய முடியும். மேலும் வாகனத்தை சேதப்படுத்தாமல் அதனை நீக்க முடியாது என்பதும் இதன் சிறப்பு அம்சமாகும்.


 இந்த மைக்ரோடாட்ஸ் தொழில்நுட்பம் வாகனங்கள் திருடப்படுவதை தடுக்கவும் மற்றும் போலியான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் உதவும் என்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment