ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் டி.ஆர்.பி. எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த ஆசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிப்பாணை வெளியிட்டது.
எனவே ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி பாலசுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவில் கணினி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவது சரியானது அல்ல, கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம், பிற மொழி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாத காரணத்தினால் ஆன்லைன் தேர்வு என்பது ஏற்புடையதாக இருக்காது,
எனவே ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டால் கணினி தெரியாதவர்கள் பலர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும், எனவே ஆன்லைன் தேர்வை ரத்து செய்து விட்டு,எழுத்துத் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
திருப்பூரை சேர்ந்த ஆசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிப்பாணை வெளியிட்டது.
எனவே ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி பாலசுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவில் கணினி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவது சரியானது அல்ல, கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம், பிற மொழி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாத காரணத்தினால் ஆன்லைன் தேர்வு என்பது ஏற்புடையதாக இருக்காது,
எனவே ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டால் கணினி தெரியாதவர்கள் பலர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும், எனவே ஆன்லைன் தேர்வை ரத்து செய்து விட்டு,எழுத்துத் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
No comments:
Post a Comment