ஆயிரத்து 316 பள்ளிகளில் 'பயோ-மெட்ரிக்' - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 19, 2019

ஆயிரத்து 316 பள்ளிகளில் 'பயோ-மெட்ரிக்'

திண்டுக்கல்லில் உள்ள ஆயிரத்து 316 அரசு பள்ளிகளுக்கு பயோ- மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய 'பயோ-மெட்ரிக்' வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்காக அரசு பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தங்கள் வருகையை பயோ-மெட்ரிக் கருவியில் கட்டாயம் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


முதற்கட்டமாக திண்டுக்கல்லில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டதுதற்போது இரண்டாம் கட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கியதன் மூலம் இதுவரை 1,316 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


பயோ-மெட்ரிக்கில் பதிவானால் மட்டுமே வருகை உறுதி செய்யப்படும். முதன்மை கல்வி அலுவலர் அவரது அலுவலகத்தில் இருந்தவாறே ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேட்டை கணினி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment