டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் எவ்வாறு தயாரிப்பது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நிலவேம்பு என்பதின் மறு பெயர் சிறியாநங்கை. இது வீடு, காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பரவலாக கிடைக்கிறதுஇந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.
தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.
டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.
அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் சாப்பிடுவதற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
இந்த கசாயத்தை தயார் செய்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள் ஆகும். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது
. மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும்.
இதைப்போன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நிலவேம்பு கசாயத்தை பயப்படாமல் தயாரித்து குடிக்கலாம். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினர்.
நிலவேம்பு என்பதின் மறு பெயர் சிறியாநங்கை. இது வீடு, காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் பரவலாக கிடைக்கிறதுஇந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.
தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.
டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.
அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் சாப்பிடுவதற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
இந்த கசாயத்தை தயார் செய்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள் ஆகும். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி தான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது
. மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும்.
இதைப்போன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நிலவேம்பு கசாயத்தை பயப்படாமல் தயாரித்து குடிக்கலாம். இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment