அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 7, 2019

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது

ராஜ்ய புரஸ்காா் மாநில விருது பெற்ற திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பிரித்திகாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது.


2018-ஆம் ஆண்டுக்கான விருது திருப்பத்தூா் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருவலம் அரசினா் மகளிா் மேனிலைப் பள்ளி சாரணீய வழிகாட்டி மாணவி டி. பிரித்திகா என்ற மாணவிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆளுனா் மாளிகையில் கடந்த மாதம் 26 ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் வழங்கி வாழ்த்தினாா்.

இந்த விருதைப் பெற்ற மாணவி டி.பிரித்திகாவுக்கு, பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் சிவகுமாா், பள்ளியின் சாரணீய வழிகாட்டி பொறுப்பு ஆசிரியை எஸ்.மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

No comments:

Post a Comment