கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலை

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 இதற்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து வரும் 22 ஆண் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 300
நிர்வாகம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - 56,500



நிர்வாகம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4

பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் ரூ.13,000 - 45,460
நிர்வாகம்: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - 10
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34,800



நிர்வாகம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62,800

வயதுவரம்பு: 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது

.
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள "SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறை பின்பற்றப்பட்டு பணியிடத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.12.2019



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Click here to download more details

No comments:

Post a Comment