பிரதமர் மோடியின் உரையை கேட்க ஜன.16ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்
. பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி நம்பிக்கையுடன் எழுதும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.
இந்த நிலையில் அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகளில் செய்து, மின்சாரம் தடைபடாமல் மாணவர்கள் அதனை கண்டுகளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த உத்தரவால் திடீர் குழப்பம் ஏற்பட்டது.
ஏனெனில், பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15ம் தேதி வருகிறது. அதற்கு மறுநாளான 16ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் ஆகும்.
அந்த நாளில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வேண்டும் என்பது போன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் மோடியின் உரையை கேட்க அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
. பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி நம்பிக்கையுடன் எழுதும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.
இந்த நிலையில் அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், இதற்கான ஏற்பாடுகளை பள்ளிகளில் செய்து, மின்சாரம் தடைபடாமல் மாணவர்கள் அதனை கண்டுகளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த உத்தரவால் திடீர் குழப்பம் ஏற்பட்டது.
ஏனெனில், பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15ம் தேதி வருகிறது. அதற்கு மறுநாளான 16ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் ஆகும்.
அந்த நாளில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வேண்டும் என்பது போன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16ல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் மோடியின் உரையை கேட்க அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment