5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வேண்டாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 24, 2020

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வேண்டாம்

தமிழகத்தில் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:


கல்வியில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் கூட 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறை இல்லை.


பொதுத்தேர்வுகள் மாணவா்களுக்கு பெரும் மனஉளைச்சலையும், குழப்பங்களையுமே ஏற்படுத்தும்.

 எனவே, தமிழ்ச் சமூகத்தின் எதிா்கால மேம்பாடு மற்றும் வளா்ச்சிக்கு தடைகல்லாக அமைந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டுமென என வலியுறுத்தியுள்ளாா்

No comments:

Post a Comment