தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து ஏடிஜிபிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 22 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம்.
*ஸ்கேனர் மூலமாக காவல் நிலையம் வருவோர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
*காவல்நிலையங்களில் இருக்கும் கிளப், மன்றம் ஜிம் ஆகியவை மூட வேண்டும்.
*காவல் நிலையங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கவேண்டும். அதில் உதவி எண்கள் கண்டிப்பாக அச்சிடப்பட்ட வேண்டும். பொது மக்களுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
*காவல்நிலையத்தில் இருக்கக்கூடிய சமூகநல கூடங்களில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது.
*காவல் நிலையங்களில் போலீசார் எந்த ஒரு கூட்டத்தை நடத்த கூடாது. துறைரீதியான கூட்டங்கள் தொடர்பாகவும், சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான கூட்டங்களையும் காவல் நிலையத்தில் நடத்தக்கூடாது.
தொலைபேசி வாயிலாகவோ, இமெயில் மூலமாகவும் , தபால் மூலமாகவும் இதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் .
*கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து காவலர்கள் பணியாற்ற வேண்டும், கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*காவல் நிலையத்தில் கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
*மருத்துவ குழுவினருடன் செல்லும் காவல்துறையினருக்கான கவச உடையும் வழங்கப்பட்டுள்ளது.
*போலீஸ் கேண்டினில் தொடர்பான விழிப்புணர்வு பதாகை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment