தஞ்சாவூர் பெரிய கோவிலை மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

தஞ்சாவூர் பெரிய கோவிலை மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல்துறை உத்தரவு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.


 கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.


 இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 147 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.


 அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவிலும் கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலை மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


 முன்னதாக,மார்ச்  31-ம்தேதி வரை தஞ்சை பெரியகோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்த நிலையில், தஞ்சை பெரியகோயிலை மூட மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.

தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை:

திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன், வடபழனி முருகன் கோயில், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில்  தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


 கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 99 சதவீதம் உடல் நிலை வெப்பம் இருக்கும் பட்சத்தில் அவர்களை கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.


 கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறை, சன்னதி மற்றும் கோயில் வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி அனைத்து கோயில்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயில் ஊழியர்கள் சார்பில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

No comments:

Post a Comment