சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 25, 2020

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இணைப்பு அந்தஸ்து பெற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்ரல், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்டத்தில் செயல்பட உள்ள பள்ளிகள், ஆண்டுதோறும் இணைப்புஅந்தஸ்து பெற வேண்டும்


. நடப்பு கல்வி ஆண்டில், இந்த அந்தஸ்தை பெறுவதற்கு பள்ளிகள் தரப்பில் விண்ணப்பிக்க, மார்ச், 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.


தற்போது, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால்,விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, சி.பி.எஸ்.இ., செயலர், அனுராக் திரிபாதி பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment