இயலாதவர்களுக்கு உதவ சென்னை மாநகராட்சி அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 25, 2020

இயலாதவர்களுக்கு உதவ சென்னை மாநகராட்சி அழைப்பு

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இயலாதவர்கள், ஆதரவற்றோருக்கு உணவுப் பொருட்கள் வழங்க, தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

 மேலும் தனியார்கள், சமூக நல ஆர்வலர்கள் சமைத்த உணவை நேரடியாக வழங்க வேண்டாம் எனவும், தங்களிடம் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, இன்று (மார்ச்-25) முதல் அமலுக்கு வந்ததுள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, தேவையான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சானிட்டரி நாப்கின், முக கவசம் ஆகியவற்றையும் ஜெ.ஜெ.விளையாட்டு அரங்கம், அண்ணா நகர், அம்மா அரங்கத்தில் கொடுக்கலாம்.


 நேரடியாக யாரும் சமைத்த உணவை வழங்க வேண்டாம். ஏனெனில் கூட்ட நெரிசல் ஏற்படலாம். நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தடைசென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், அரிசி, கோதுமை போன்ற பொருட்களை மட்டும் டெலிவரி செய்ய அனுமதி அளித்தும், இன்று (மார்ச் 25) மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment