CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

சி.பி.எஸ்.இ., பள்ளிதேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் வரும் 31 ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்கலை கழகங்களில் நடைபெற்று வரும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என அதன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment