ரூ 1,000 நிதியுதவி :சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

ரூ 1,000 நிதியுதவி :சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று முதல் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் அனைத்து மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது. எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்து வருகின்றனர்

பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக இருப்பதை காண முடிகிறது. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவ இருக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிவாரண நிதி மற்றும் இலவச அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.

1 comment:

  1. சரியான நடவடிக்கைதான், அரசே அவர்கள் அறிவுரையை கடைபிடிக்கவில்லை எனில் மக்கள் நிலை என்னவாகும்?

    ReplyDelete