கரோனா எதிரொலி: பொறியியல் கல்லூரி ஆன்லைன் கல்வி வளாகமாக மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

கரோனா எதிரொலி: பொறியியல் கல்லூரி ஆன்லைன் கல்வி வளாகமாக மாற்றம்

கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கொங்கு பொறியியல் கல்லூரி ஆன்லைன் கல்வி வளாகமாக மாறியுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் வி.பாலுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளை காலி செய்துள்ள நிலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் 8,000-க்கும் மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. துறைத் தலைவர்கள் மூலம் ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளது

கூகிள்-மீட், கூகிள்-கிளாஸ்ரூம் மற்றும் ஜூம் ஆகிய மூன்று ஆன்லைன் கருவிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகள் மற்றும் ஆன்டாராய்டு செல்லிட பேசிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் கற்றலை மிக எளிதாகப் பின்பற்றலாம். மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி, பேராசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளைக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் வருகை லாகின் குறிப்பு மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கட்டாயம் ஆன்லைன் வகுப்பை தொடர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


தவிர மாணவர்கள் டுடோரியல் எனப்படும் தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். இல்லையெனில் அவர்கள் மதிப்பெண்களை இழப்பார்கள். இந்த டுடோரியல்களை எழுதும் போது மாணவர்களை மேற்பார்வை செய்வது அவசியமில்லை. இந்த ஆன்லைன் டுடோரியல்கள் புத்தகங்களைப் பயன்படுத்தியே எழுதும் வகையில் இருக்கும்.

ஆன்லைன் கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களுக்கு உதவ, ஈ.ஆர்.பி என்ற குழு கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.

கல்லூரி மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆய்வக படிப்புகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தவும், வகுப்பறை படிப்புகளில் குறைந்த கவனம் செலுத்தவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.

கரோனா விடுமுறைக் காலத்தில் பேராசிரியர்களுக்கும் திறன் வளர்ப்பு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பதிவு செய்வதோடு மாணவர்களின் வருகையையும் பராமரிக்க வேண்டும்.

பல ஆசிரியர்கள், குறிப்பாக இளம் ஆசிரியர்கள், இப்போது ஆன்லைன் மூலம் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூக் மற்றும் என்.பி.டி.எல் போன்ற அரசு இணையதளங்களால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்புகளுக்கு அவர்கள் பதிவு செய்ய அறிவுரைக்கப்பட்டுள்ளனர். பல பேராசிரியர்களும் இப்போது ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிப்பதில் தீவிரமாக உள்ளனர்.


இந்த விடுமுறை கால பணிகள் அனைத்தும் துறைத் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. சுமார் 30 பேர் பங்கேற்கும் துறைத் தலைவர்கள் கூட்டமானது வாரத்திற்கு இருமுறை கல்லூரி முதல்வரால் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களை மைக்ரோசாப்ட் டீம் என்ற மற்றொரு ஆன்லைன் கருவி மூலம் கல்லூரி முதல்வர் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment