சொந்த ஊர்களுக்குச் சென்ற இவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, April 5, 2020

சொந்த ஊர்களுக்குச் சென்ற இவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேரை உடனடியாக பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மத்திய - மாநில அரசுகள், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 50 சதவீத ஊழியர்களுடன் முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மீதமுள்ள ஊழியர்கள், சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவை அடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியைச் சேர்ந்த 168 பணியாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.அவர்களை, உடனடியாக பணிக்குத் திரும்பும்படி, வங்கியின் பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார்.



விசாரணையின் போது, வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கியின் 168 ஊழியர்களும் சொந்த ஊர்களுக்குச் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும், வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டதாகவும், அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றது சட்டவிரோதம் எனவும் வாதிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதி, அரசு அறிவித்துள்ள நிதியுதவியை, பயனாளிகளுக்கு வழங்க வேண்டியுள்ளதால், 168 ஊழியர்களையும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டார்


. சொந்த கிராமங்களுக்கு அருகில் உள்ள கிளைகளில் பணியாற்ற அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுக வேண்டும் எனவும், அனுமதி கிடைக்காவிட்டால் சேலத்திற்கு பயணப்பட, உரிய பயண அனுமதியைப் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment