ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 4, 2020

ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு?

தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் கல்விநிலையங்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல, 9-ம் வகுப்புவரை மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன


ஆனால், தமிழக அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதாக அறிவித்தது. இந்தநிலையில், ஜூன் 3-வது வாரத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன


மேலும் இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment