மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
. இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறு வதற்காக வழங்கப்பட்டுள்ள அட்டைகள் கடந்த மார்ச் 31-ம் தேதியோடு காலாவதியானது.
இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த அட்டைகளைப் பயன் படுத்தி ஜுலை 31-ம் தேதி வரை சிகிச்சை பெற காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், மார்ச் 31-ம் தேதி யுடன் ஓய்வுபெற்ற ஊழியர்களும் அவர்கள் பணியின்போது பயன்படுத்தி வந்த அட்டையை, ஜுலை 31-ம் தேதி வரை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment