கொரோனா லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்பட்டாலும், பழைய இயல்பு நிலை திரும்ப அவகாசம் தேவை எனும் நிலையில், வருங்காலத்திற்கான சரியான திட்டமிடல் அவசியம்.
உலகையே உலுக்கியிருக்கும் கொரோனா, எல்லா தரப்பினருக்கும் முக்கிய பாடங்களை கற்றுத்தந்து இருக்கிறது. தனிநபர்களை பொறுத்தவரை, சேமிப்பின் முக்கியத்துவத்தையும், தேவைகளில் இருந்து விருப்ப செலவுகளை பிரிப்பதன் அவசியத்தையும் உணர்த்திஇருக்கிறது.ஒரு மாத காலத்திற்கு மேல்வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலை, அத்தியாவசிய செலவுகள் எவை என்பதையும் புரிய வைத்துள்ளது.
அதே நேரத்தில், ஒட்டுமொத்த பொருளாதார நோக்கில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள், பணியிழப்பு, ஊதிய குறைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்டவுடன் இயல்பு நிலை வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
தொடரும் சவால்கள்
கொரோனாவால் மாறியிருக்கும் சூழலில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். எதிர்கால நலன் காக்கும் வகையில் சரியான திட்டமிடலும் அவசியம். ஒவ்வொருவரும் தங்களது தற்போதைய சூழலை அலசி ஆராய்வதில் இருந்து திட்டமிடலை துவங்க வேண்டும்.
ஒவ்வொருவரும் மூன்று விதமான சூழலை எதிர்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மிக மோசமான நிலையில், பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்பை எதிர்கொள்ளலாம். சகஜ நிலை என்பது, நிதி நோக்கில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக அமையும். ஒரு சிலர், நிதி நோக்கில் பாதிப்பு அடையாததோடு, லாக்டவுன் காலத்தில் செலவுகள் குறைந்து
கூடுதலாக சேமித்து இருக்கலாம்.
மோசமான நிலையில் இருப்பவர்களும் சரி, சிறந்த நிலையில் இருப்பவர்களும் சரி, இனி வரும் மாதங்களில் செலவை குறைக்கும் வழியை கடைப்பிடித்தாக வேண்டும்.
அத்தியாவசிய செலவுகள் தவிர, மற்ற செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த செலவுகளை எல்லாம் சேமிப்பாக மாற்ற வேண்டும். வெளியே சாப்பிடுவது, இணைய பொழுதுபோக்கு போன்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.சேமிப்பை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவசர தேவைக்கான பணம் கையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கவனம் தேவை
பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்புக்கு உள்ளானவர்கள் எனில், அவசர தேவைக்கான தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். செலவுகளை இன்னும் குறைக்க வேண்டும்.
இந்த கடினமானகாலத்தில் கடன் சுமை கைமீறிச்செல்லாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.வீட்டுக்கடன் போன்ற கடன்பெற்றிருப்பவர்கள், வாய்ப்பிருந்தால்
மாதத்தவணையை தள்ளிப்போடும் வசதியை நாடாமல், தவணையை செலுத்தி வரவேண்டும். இது,எதிர்கால சுமையை குறைக்கும்.
கடனுக்கான தற்போதைய வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவது பலன் அளிக்குமா என பரிசீலிக்கலாம்.பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும் வரை கவனமாக இருக்க வேண்டும். சேமிப்பில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் முதலீடுகளை நிர்வகிப்பதையும் மறந்துவிடக்கூடாது.
லாக்டவுன், நிதிநெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், திட்டமிட்டபடி முதலீடுகளை தொடர வேண்டும்.
கூடுதலாக சேமிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் முதலீட்டை அதிகமாக்க வேண்டும். போதுமான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இந்த
நெருக்கடி ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் என்பதை உணர்த்தியிருப்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
உலகையே உலுக்கியிருக்கும் கொரோனா, எல்லா தரப்பினருக்கும் முக்கிய பாடங்களை கற்றுத்தந்து இருக்கிறது. தனிநபர்களை பொறுத்தவரை, சேமிப்பின் முக்கியத்துவத்தையும், தேவைகளில் இருந்து விருப்ப செலவுகளை பிரிப்பதன் அவசியத்தையும் உணர்த்திஇருக்கிறது.ஒரு மாத காலத்திற்கு மேல்வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலை, அத்தியாவசிய செலவுகள் எவை என்பதையும் புரிய வைத்துள்ளது.
அதே நேரத்தில், ஒட்டுமொத்த பொருளாதார நோக்கில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள், பணியிழப்பு, ஊதிய குறைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, லாக்டவுன் விலக்கி கொள்ளப்பட்டவுடன் இயல்பு நிலை வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
தொடரும் சவால்கள்
கொரோனாவால் மாறியிருக்கும் சூழலில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். எதிர்கால நலன் காக்கும் வகையில் சரியான திட்டமிடலும் அவசியம். ஒவ்வொருவரும் தங்களது தற்போதைய சூழலை அலசி ஆராய்வதில் இருந்து திட்டமிடலை துவங்க வேண்டும்.
ஒவ்வொருவரும் மூன்று விதமான சூழலை எதிர்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மிக மோசமான நிலையில், பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்பை எதிர்கொள்ளலாம். சகஜ நிலை என்பது, நிதி நோக்கில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக அமையும். ஒரு சிலர், நிதி நோக்கில் பாதிப்பு அடையாததோடு, லாக்டவுன் காலத்தில் செலவுகள் குறைந்து
கூடுதலாக சேமித்து இருக்கலாம்.
மோசமான நிலையில் இருப்பவர்களும் சரி, சிறந்த நிலையில் இருப்பவர்களும் சரி, இனி வரும் மாதங்களில் செலவை குறைக்கும் வழியை கடைப்பிடித்தாக வேண்டும்.
அத்தியாவசிய செலவுகள் தவிர, மற்ற செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த செலவுகளை எல்லாம் சேமிப்பாக மாற்ற வேண்டும். வெளியே சாப்பிடுவது, இணைய பொழுதுபோக்கு போன்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.சேமிப்பை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவசர தேவைக்கான பணம் கையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கவனம் தேவை
பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்புக்கு உள்ளானவர்கள் எனில், அவசர தேவைக்கான தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். செலவுகளை இன்னும் குறைக்க வேண்டும்.
இந்த கடினமானகாலத்தில் கடன் சுமை கைமீறிச்செல்லாமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.வீட்டுக்கடன் போன்ற கடன்பெற்றிருப்பவர்கள், வாய்ப்பிருந்தால்
மாதத்தவணையை தள்ளிப்போடும் வசதியை நாடாமல், தவணையை செலுத்தி வரவேண்டும். இது,எதிர்கால சுமையை குறைக்கும்.
கடனுக்கான தற்போதைய வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்திற்கு மாறுவது பலன் அளிக்குமா என பரிசீலிக்கலாம்.பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பும் வரை கவனமாக இருக்க வேண்டும். சேமிப்பில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் முதலீடுகளை நிர்வகிப்பதையும் மறந்துவிடக்கூடாது.
லாக்டவுன், நிதிநெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், திட்டமிட்டபடி முதலீடுகளை தொடர வேண்டும்.
கூடுதலாக சேமிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் முதலீட்டை அதிகமாக்க வேண்டும். போதுமான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இந்த
நெருக்கடி ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் என்பதை உணர்த்தியிருப்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment