பானைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்... ஓவிய ஆசிரியரின் அசத்தல் முயற்சி! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 3, 2020

பானைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்... ஓவிய ஆசிரியரின் அசத்தல் முயற்சி!

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரான ஜோயல் பெட்ரிசியன் பானை ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதற்காக மண் பானைகளில் வண்ண வண்ண விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்

. ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதன் அவசியம், முகக்கவசங்கள் அணிவதன் அவசியம், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவம் போன்றவற்றை பானைகளில் ஓவியங்கள் வரைந்து விளக்கியுள்ளார்.


ஒரு பானையில் ஓவியம் வரைவதற்கு அரைநாள் தேவைப்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவியத்திற்காக பானையைத் தேர்ந்தெடுத்தாகவும் கூறும் ஓவியர், தன் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்க விரும்புவதாகக் கூறுகின்றார்.


மூங்கில் இலை, சிறிய குண்டு பல்பு உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரைந்து தன்னுடைய திறனை அவர் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment