ரூ 20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்திற்கான 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது.
குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார்.
இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி.
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 86 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான 63 லட்ச கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.2 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தை விட, நடப்பு மே மாதத்தில் 40-50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 83% அமல்படுத்தப்படும்
அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.
அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது.
குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டு வருகிறார்.
இன்றைய அறிவிப்புகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் சிறிய விவசாயிகள் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி.
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 86 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான 63 லட்ச கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.2 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமாக மே 13 ஆம் தேதி வரை 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தை விட, நடப்பு மே மாதத்தில் 40-50% வரை கூடுதலான மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 83% அமல்படுத்தப்படும்
அரிசி அல்லது கோதுமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
No comments:
Post a Comment