ஊரடங்கு முடியும் வரை கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது: இன்ஜி. கல்லூரிகளுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 15, 2020

ஊரடங்கு முடியும் வரை கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது: இன்ஜி. கல்லூரிகளுக்கு உத்தரவு

ஊரடங்கு முறையும் வரையில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்கக் கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு உத்தரவிட்டுள்ளது.


 பொது முடக்கம் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்று குற்றச்சாட்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுக்கு தெரிய வந்தது. 


இதையடுத்து, அதன் தலைவர் அனில் சகஸ்ரபுதே தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிலநுட்ப கல்லூரிகளுக்கு எழுதிய கடித‍த்தில் கூறப்பட்டுள்ளதாவது:


பல தனியார் பொறியில் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் கிடைத்துள்ளது. 

கொரோனா தொற்று தேசிய பேரிடர் என்பதால் ஆசிரியர்களின் குடும்பங்கள் மன அழுத்ததுக்கும் பட்டினிக்கும் ஆளாக கூடாது என்பதால் அவர்களுக்கு முறையாக சம்பளத்தை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனை கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். 



அதே போல், சில கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. ஆனால், நோய் தொற்று முடிவடைந்து இயல்புநிலை திரும்பியதும் கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment