கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் ஜூன் மாதம் வரை, தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன.
ஆனால் அங்கு கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான , கூகுள் மற்றும் பேஸ்புக் இந்த ஆண்டு இறுதி வரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன
பேஸ்புக் நிறுவனம் ஜூலை 6ம் தேதி, நிறுவனத்தை திறக்க உத்தேசித்திருந்தது. ஆனால், பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என, அறிவித்துள்ளது.
ஜூன் 1ம் தேதி வரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு , இந்த ஆண்டு இறுதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆனால் அங்கு கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான , கூகுள் மற்றும் பேஸ்புக் இந்த ஆண்டு இறுதி வரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன
பேஸ்புக் நிறுவனம் ஜூலை 6ம் தேதி, நிறுவனத்தை திறக்க உத்தேசித்திருந்தது. ஆனால், பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என, அறிவித்துள்ளது.
ஜூன் 1ம் தேதி வரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு , இந்த ஆண்டு இறுதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment