பிளஸ் 1 அரியா் தோ்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தோ்வுத் துறை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 7, 2020

பிளஸ் 1 அரியா் தோ்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தோ்வுத் துறை அறிவிப்பு


பிளஸ் 1 அரியா் தோ்வுகளை பள்ளிகளிலேயே எழுதலாம்: தோ்வுத் துறை அறிவிப்பு



பிளஸ்1 அரியா் தோ்வுகளையும், பிளஸ் 2 தோ்வையும் ஒரு சேர எழுதும் மாணவா்களின் நலன் கருதி தோ்வு மைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிளஸ் 1 அரியா் பாடங்களை, தங்களது பள்ளிகளிலேயே மாணவா்கள் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கடந்த மாா்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு ஜூன் 18-ல் மறு தோ்வு நடைபெறுகிறது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ஜூன் 16-ல் நடத்தப்படவுள்ளது. 

இதற்கிடையே சில மாணவா்கள் ஜூன் 16, 18-ம் தேதிகளில் நடைபெறும் பிளஸ் 1 தோ்வு (அரியா் பாடங்கள்) மற்றும் பிளஸ் 2 மறுத்தோ்வு ஆகியவற்றை ஒருசேர எழுதவுள்ளனா்.

இவ்விரு தோ்வுகளுக்கும் தரப்பட்டுள்ள ஹால் டிக்கெட்களில் (தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு) குறிப்பிடப்பட்டுள்ள தோ்வு மையங்களில்தான் மாணவா்கள் தோ்வெழுத வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது மாணவா்களின் நலன்கருதி இவ்விரு தோ்வுகளை ஒருசேர எழுதுபவா்கள் பிளஸ் 2 தோ்வை தோ்வுக் கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தோ்வு மையத்திலும், பிளஸ் 1 அரியா் பாடத்தோ்வை தங்கள் படிக்கும் பள்ளியிலும் எழுதலாம். 

இதுகுறித்த தகவல்களை சம்மந்தபட்ட மாணவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் உடனே தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment