சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 9, 2020

சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு

சட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு


 3 மற்றும் 5ம் ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைனில் எழுத அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் சிறிமந்தோசென் வெளியிட்ட அறிக்கை:


 கடந்த மே 24ம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.அதன் அடிப்படையில் 3 மற்றும் 5ம் ஆண்டு படிக்கும் சட்ட கல்லூரி மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைனில் எழுத வேண்டும். 

அதேநேரத்தில் இந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அந்தந்த கல்லூரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய ஆண்டில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன்டர்னல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இறுதி தேர்வு முடித்த ஒரு மாதத்திற்குள் கல்லூரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.

No comments:

Post a Comment