தலைமை செயலகத்துக்கு விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 12, 2020

தலைமை செயலகத்துக்கு விடுமுறை


தலைமை செயலகத்துக்கு விடுமுறை

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி களுக்காக 2-ம் சனிக்கிழமையான இன்று தலைமைச் செயலகத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுத்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு காரணமாக 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அரசு அலுவலர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகி றது. 

இதற்கிடையே அலுவலகங் களில் வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி களை குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும்படி மத்திய சுகா தாரத் துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு மாதத்தின் 2-வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், அந்த சனி, ஞாயிற்றுக்கிழமை களில் கரோனா தடுப்பு பணி கள் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமைச் செயலர் அறிவித்தார். அதன்படி நோய் தடுப்பு பணிகளுக் காக தலைமை செயலகத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment