புகாருக்கு உள்ளான பள்ளிகளில் CEO ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 20, 2020

புகாருக்கு உள்ளான பள்ளிகளில் CEO ஆய்வு

புகாருக்கு உள்ளான பள்ளிகளில் CEO
திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகம் வழங்குவதற்காக அரையாண்டு, காலாண்டு தேர்வுகளின் வினாத்தாள்கள் 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பப்பட்டு, தேர்வு எழுதப்பட்ட விடைத்தாள்கள் பெறப்பட்டு வந்ததாக புகார் எழுந்தது.

 இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வு மேற்கொண்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: 

விடைத்தாள்கள் பெறப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் முந்தைய காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல்களை எடுத்துச் செல்வதாகவும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கவும் பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு முறைகேடு எதுவும் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பத்தாம் வகுப்பு காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத , தேர்ச்சியடையாத மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதால் எந்த பள்ளிகளிலும் தேர்வு நடத்த அவசியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment