10, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் முதல்வா் பழனிசாமி வழங்கினாா்
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வி தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வி தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்டது.
இப்போது, கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருக்க கல்வி தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். பிற வகுப்புகளின் பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஒளிபரப்புகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
பாடப் புத்தகங்கள்: பள்ளிக் கல்வித் துறையில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லாத பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
பிளஸ் 2 மாணவா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு தனியாக விடியோ வடிவிலான பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களை தமிழக அரசு ஏற்கெனவே வழங்கிய மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்.
அறிக்கை சமா்பிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக, நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி மற்றும் கற்பித்தலில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். பிற வகுப்புகளின் பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஒளிபரப்புகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
பாடப் புத்தகங்கள்: பள்ளிக் கல்வித் துறையில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லாத பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
பிளஸ் 2 மாணவா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு தனியாக விடியோ வடிவிலான பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்களை தமிழக அரசு ஏற்கெனவே வழங்கிய மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்.
அறிக்கை சமா்பிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக, நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி மற்றும் கற்பித்தலில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சிரமங்களை எதிா்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கிட தமிழக அரசால் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை வல்லுநா் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் முதல்வா் பழனிசாமியிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தாா்

No comments:
Post a Comment