அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 6, 2020

அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி

அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் தளர்வுகளுடனான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, முழு முடக்கம் காரணமாக அரசு அலுவலகங்களில் 33% பணியாளர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment