ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 18, 2020

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள்

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள்
ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில் அதில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 சீனாவில் உருவாகி உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரசால் இதுவரை ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா பிரேசில் பிரிட்டன் ரஷ்யா இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளின் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கொரோனாவை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனாலும் அமெரிக்கா பிரிட்டன் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி மற்றும் மருந்துகள் பரிசோதனைகளில் உள்ளன. இதில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வரும் தடுப்பூசியில் மற்ற நாடுகளின் கண்டுபிடிப்புகளை விட பல்வேறு சிறந்த அம்சங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஜென்னர் பயிற்சி மையம் அஸ்டரா ஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.

இந்த ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை சமீபத்தில் துவங்கியது. இதில் கிடைத்த முடிவுகள் குறித்து 'தி டெய்லி டெலிகிராப்' என்ற பிரிட்டன் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.முதலாவதாக இந்த ஊசியை செலுத்தும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது; இரண்டாவதாக மனித உடலில் வைரசை உருவாக்கும் 'செல்'களை அழிக்கும். 'கில்லர் டி செல்' என்ற செல்லும் இதில் உள்ளது.

இந்த தடுப்பூசியை செலுத்தும் நபருக்கு ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி செல் என்பது அவரது உடலில் பல ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் என்பது மிகவும் சாதகமான அம்சம். 

இந்த தடுப்பூசி குறித்து இன்னும் பல நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தற்போதைக்கு இந்த ஆராய்ச்சி சரியான திசையில் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்க அனுமதி அளித்த ஆராய்ச்சி நெறிமுறை குழு தலைவர் டேவிட் கார்பென்டர் ''இந்த தடுப்பூசி எப்போது தயாராகும் என்பதை உறுதியாக கூற முடியாது.

 சில நேரங்களில் ஆராய்ச்சியின் முடிவுகள் தவறாக கூட போகலாம். இருந்தாலும் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால் வரும் செப்டம்பரில் இந்த ஊசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது'' என்றார். 

ஆக்ஸ்போர்டு பல்கலையின் இந்த அறிவிப்பு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என ஏக்கத்துடன் காத்திருக்கும் சர்வதேச சமுதாயத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி மூன்றாம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.அங்குள்ள 15 ஆயிரம் தன்னார்வர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முயற்சி துவங்கியுள்ளது.

 சீனாவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அபுதாபி ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment