மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு
தொடர்ந்து 2 மாதமாக மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 4 ரூபாய் அதிகரித்து, சென்னையில் ரூ.610.50 ஆக உள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
தொடர்ந்து 2 மாதமாக மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 4 ரூபாய் அதிகரித்து, சென்னையில் ரூ.610.50 ஆக உள்ளது.
தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. பின்னர் கடந்த மே மாதம் மீண்டும் உயரத்தொடங்கியது.
தற்போது இன்று (ஜூலை 1ம் தேதி) வெளியான அறிவிப்பின்படி, தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4 அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மே மாதத்தில் ரூ.606.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.610.50 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், டில்லியில் ஒரு ரூபாயும், கோல்கட்டாவில் ரூ.4.50-ம், மும்பையில் ரூ.3.50-ம் உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment