அரசு பள்ளியில் 14 மடிக்கணினிகள் திருட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 11, 2020

அரசு பள்ளியில் 14 மடிக்கணினிகள் திருட்டு

 அரசு பள்ளியில் 14 மடிக்கணினிகள் திருட்டு

பழவேற்காடு அரசு பள்ளியில் காவலாளியை கட்டிப் போட்டு தொலைக்காட்சி பெட்டி, 14 மடிக்கணினிகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடில் உள்ளது ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி. நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், காவலாளி முகுந்தையனை சரமாரியாக தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு, வகுப்பறை ஒன்றில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, 14 மடிக்கணினிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.


அக்கம்பக்கத்தினர் காவலாளியை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பாலைவனம் போலீஸார், மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment