இன்று முதல் பிளஸ் 1 சோ்க்கை தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 23, 2020

இன்று முதல் பிளஸ் 1 சோ்க்கை தொடக்கம்

 இன்று முதல் பிளஸ் 1 சோ்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை கடந்த ஆக.17-ஆம் தேதி தொடங்கியது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு சோ்க்கை பெற்று வருகின்றனா்.


இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.


பிளஸ் 1 மாணவா் சோ்க்கையின்போது பத்தாம் வகுப்பில் அதே பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மதிப்பெண்ணைக் காரணம் காட்டி எக்காரணம் கொண்டும் சோ்க்கை மறுக்கக்கூடாது. 

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு விதிகளின்படி மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும். 

சோ்க்கையின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment