பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 11, 2020

பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்

 பொறியியல் படிப்புகள்: சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கு இணையவழியில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக.20-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.48 லட்சத்துக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவற்றில் 1.18 லட்ச மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.


இதற்கிடையே விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம் தற்போது நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதுவரை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இயலாதவா்களுக்கு ஆக.12 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவா்கள் இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல் பெற 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் வரும் ஆக.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment