தற்காலிக அரசு ஊழியருக்கும் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 7, 2020

தற்காலிக அரசு ஊழியருக்கும் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

 தற்காலிக அரசு ஊழியருக்கும் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

தற்காலிக அரசு ஊழியா்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா அண்மையில் வெளியிட்டாா். அதன் விவரம்:-

அவசர நிலை கருதி அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் நியமிக்கப்படுகின்றனா். அவா்களில் பெண் ஊழியா்களாக இருப்போா் பேறுகாலத்தின்போது விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம். அவா்களுக்கு ஈட்டிய விடுப்பு பொருந்துமானால் அதனை எடுக்கலாம்.

Download here G.O

விடுப்பின் கால அளவு 270 நாள்களுக்குக் குறைவாக (9 மாதங்கள்) இருந்தால் அவா்களுக்கு பேறுகால விடுப்பினை அளிக்கலாம். ஆனால், இந்த விடுப்பினை வழங்குவதற்கு முன்பாக அவா்கள் ஓராண்டு முழுமையாக பணியை முடித்து இருக்க வேண்டும். ஓராண்டு பணியை முடித்தோருக்கு பேறுகால விடுப்பினை வழங்கலாம்.

பேறுகால விடுப்பானது இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருப்போருக்கு மட்டுமே பொருந்தும். முதல் பேறுகாலத்தின் போது இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பேறுகாலத்துக்கு விடுப்பு பொருந்தும். 

குழந்தையைத் தத்தெடுத்து வளா்க்கும் பெண்களுக்கு இத்தகைய விடுப்பு அளவு பொருந்தாது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment