தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இன்றைக்குள் (10ம் தேதி ) விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அப்டேட்டர் சர்வீசஸ் பிரைவேட் லிட். நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான https://www.tnprivatejobs.in.gov.in என்ற முகவரியில் ஆக.10ம் தேதிக்குள் (இன்றைக்குள்) பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment