இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை இத்தனை ஆயிரம் கோடி :ஆய்வில் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 9, 2020

இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை இத்தனை ஆயிரம் கோடி :ஆய்வில் தகவல்

 இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை இத்தனை ஆயிரம் கோடி :ஆய்வில் தகவல்


புதுடில்லி: இந்தியாவில் தங்கள் பிள்ளைகளின் டியூஷனுக்காக வருடத்திற்கு பெற்றோர் ரூ 25,000 கோடி ரூபாய் செலவிடுவதாக தேசிய புள்ளியல் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

2017~18 கல்வியாண்டில் பள்ளிக்கல்வி குறித்து தேசிய புள்ளியல் அலுவலகம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் தங்கள் பிள்ளைகளின் டியூசன் வகுப்புகளுக்கு மட்டும் பெற்றோர் வருடத்திற்கு ரூ 25,000 கோடி வரை செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது.

இதில் நுழைவு தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு செலவிடப்படும் தொகை சேர்க்கவில்லை. பள்ளிக் கல்விககும் எழுத்தறிவுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடே ரூ 59 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பிள்ளைகளின் படிப்புச்செலவுக்காக ஒரு வருடத்திற்கு பெற்றோர் செலவு செய்யும் மொத்த தொகை 1.9 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் புத்தகங்களுக்காகவும். தனியார் டியூஷன்களுக்கு 13 சதவீதமும் செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment