எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது. அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது.
குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உடையை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டுரையில் பகிர்ந்திருந்தார்.
அதனை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரையில் மறுபதிவு செய்துள்ளார். அதில், தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment