அரசு பள்ளியில் டி.இ.ஓ., ஆய்வு
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆரோக்யசாமி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி, கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் பேசினார்.
தொடர்ந்து, பள்ளியில் மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்து, விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், பள்ளி ஆய்வாளர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் முனுசாமி, மகேந்திரன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment