சென்னை பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்
சென்னை பல்கலை, புதிய துணைவேந்தராக கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பல்கலை துணைவேந்தராக பணியாற்றிய, துரைசாமியின் பதவிக்காலம், மே மாதம் முடிந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழுவை நியமித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
இதையடுத்து, தகுதியான பேராசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. இதன்படி, புதிய துணைவேந்தராக பேராசிரியர் கவுரி நியமிக்கப்பட்டதாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்
.இதுகுறித்து, கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு:பேராசிரியர் கவுரி, அண்ணா பல்கலை முன்னாள் பேராசிரியர். 37 ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவம் மிக்கவர். அண்ணா பல்கலை பதிவாளராக பணியாற்றி, நிர்வாக அனுபவம் உள்ளவர். இவர், 94 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.
சர்வதேச கருத்தரங்குகளில், 30 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இவரது வழிகாட்டுதலில், 13 பேர், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை முடித்துள்ளனர்.தமிழக அரசின், டான்சி, கேபிள், 'டிவி' மற்றும் 'டெக்ஸ்கோ' நிறுவன இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும், மத்திய அரசின் தக் ஷ் கல்வி தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். சென்னை பல்கலையின் கல்வி வளர்ச்சிக்கு திறம்பட செயல்படுவார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment