வாகன ஓட்டிகளுக்கு அரசு புது உத்தரவு கிரெடிட் கார்டு விதிமுறையும் மாற்றம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, October 1, 2020

வாகன ஓட்டிகளுக்கு அரசு புது உத்தரவு கிரெடிட் கார்டு விதிமுறையும் மாற்றம்

 வாகன ஓட்டிகளுக்கு அரசு புது உத்தரவு கிரெடிட் கார்டு விதிமுறையும் மாற்றம்


மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, வாகன ஓட்டிகள், வாகனத்துக்கான அசல் சான்றிதழ்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை.



ஆவணங்களின், 'டிஜிட்டல்' பிரதிகள் இருந்தால் போதுமானது. 'கிரெடிட் மற்றும் டெபிட்' கார்டுகளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன.


 'டெபிட்' மற்றும் 'கிரெடிட்' கார்டுகள் பயன்படுத்துதல், வருமான வரி, சுகாதார காப்பீடு, மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட துறைகளின் விதிகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.


புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்:


* இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் ஆர்.சி., புக், ஓட்டுனர் உரிமம், காப்பீடு போன்றவற்றை காகிதங்களாக (ஹார்ட் காப்பிஸ்) வைத்திருக்கத் தேவையில்லை. 


அதற்கு மாறாக, மத்திய அரசின், 'டிஜிலாக்கர்' அல்லது 'எம்பரிவாஹன்' மூலம், 'டிஜிட்டல்' முறையில் வைத்துக்கொள்ளலாம்.


*ஸ்மார்ட் போனில் டிஜிலாக்கரைப் பதிவிறக்கம் செய்து, இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ள முடியும். போக்குவரத்து போலீசாரிடம், டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பித்தாலே போதுமானது.


* வாகனத்தில் செல்லும் போது, வழியை தெரிந்து கொள்வதற்கு மட்டும், மொபைல் போன்களை பயன்படுத்தலாம். வாகனத்தை இயக்கும்போது, மொபைலில் பேசுவது தடை செய்யப்பட்டு உள்ளது


பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவசமாக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது


* வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்திற்கு மற்றும் வெளிநாட்டில் பொருட்கள் வாங்க, 7 லட்ச ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தால், 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவின்படி, பேக்கரிகளில், 'பேக்கிங்' செய்யப்படாமல் விற்கப்படும் இனிப்புகளிலும், அதை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதை விற்பனையாளர்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்


* சமையல் எண்ணெய்களுடன், கடுகு எண்ணெயை கலக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் விதித்துள்ள தடை அமலுக்கு வந்துள்ளது


கொரோனா பரவலையடுத்து, சுகாதார காப்பீடு திட்டங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவக் காப்பீடு பெறும்போது, சில நோய்கள் பட்டியலில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளன; சில நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுகாதாரக் காப்பீடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பிரீமியம் தொகை அதிகரிக்கும்.


* 'டிவி' தயாரிக்க பயன்படுத்தப்படும், 'செல் பேனல்'களுக்கு வழங்கப்பட்டு வந்த இறக்குமதி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செல் பேனல்களுக்கு, 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது


* 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது


அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும், இந்தியாவில் உள்ள, ஏ.டி.எம்., மற்றும், 'பாயின்ட் ஆப் சேல்' இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும்


* வெளிநாடுகளில் பயன்படுத்த வேண்டுமெனில், வங்கியில் அனுமதியைப் பெற வேண்டும். பணப் பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது


* புதிய சேவைகளை தேர்வு செய்வது அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனை, சர்வதேச பரிவர்த்தனை மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும், வாடிக்கையாளர்களே பதிவு செய்து கொள்ளலாம்


* மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தாங்கள் விற்கும் பொருட்களுக்கு மூல வரியாக,

1 சதவீதத்தை பிடித்து, வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment