ஊர்காவல் படை காலிப்பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊர்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு உதவியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஊர்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊர்காவலர்கள் பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இதற்கு தகுதிகளாக வயது 18 வயது முதல் 45 வயது வரையும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவர்கள், விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட அயுதப்படை டி.எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment