அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 26, 2021

அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

 அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி


வெள்ளகோவில்: முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பள்ளியில்  மாணவர்களுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 


இதில் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment