ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 15, 2021

ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி

 ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி


ஆதி திராவிடா் நல விடுதிகளில் சோ்வதற்கு தகுதியான பள்ளி மாணவா்கள், பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் 26 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.


இவ்விடுதிகளில் சேர விரும்பும் எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி மாணவா்கள், அவரவா் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளின் காப்பாளரிடமிருந்து


 விடுதி சோ்க்கை விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூா்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியா் அல்லது கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் பள்ளி மாணவா்கள், பிப்.18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவா்கள் பிப்.19-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, 044 2522 5657 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment